மலர்களின் வேதனை
வண்ண மலர்கொண்டு
உன் வதனம் சிலிர்த்திட
பாதடி நாடி தூவிய மலர்கள்
இதழ் இதழ்களாய்
நீ அடைந்த வழிகளில்
என் எண்ண ஓட்டத்தில்
கலந்த உன்னால்
நெஞ்சம் நிறைய
தந்த காதலில்
மங்கிய மதியால்
உன்னைச் சூடினேன்
மலராய்.......
மலர்களின் வேதனையால்
வெறுத்த எம் காதல்
மலரா மலர்களாய்
வாடியதும் தகுமோ....
வெள்ளி, 4 ஜூன், 2010
மானே என்றேன்..
மானங்கெட்டவனே என்றாள் -
மனம் தளரவில்லை.
கண்ணே என்றேன்..
போடா கழுதை என்றாள் -
நான் கலங்கவில்லை.
நீயின்றி நானில்லை என்றேன்..
இல்லாமல் போகப்போகிறாய் என்றாள் -
அவளை விட்டு நகரவில்லை.
என் உலகமே நீதான் என்றேன்..
உன்னை உதைக்கப் போகிறேன் என்றாள் -
அவளை உதறவில்லை
அழகாய் இருக்கிறாய் என்றேன்..
அடி வாங்கப் போகிறாய் என்றாள் -
அவளை அலட்சியப் படுத்தவில்லை
என் அகிலமும் நீ தான் என்றேன்
சற்றும் யோசிக்காமல்
அண்ணா ...என்றாள்
.
(
.
பேசாமல் திரும்பி வந்துவிட்டேன்....
இதுக்கும் மேல அங்க நின்னா நமக்கு என்ன மரியாதை .
மானங்கெட்டவனே என்றாள் -
மனம் தளரவில்லை.
கண்ணே என்றேன்..
போடா கழுதை என்றாள் -
நான் கலங்கவில்லை.
நீயின்றி நானில்லை என்றேன்..
இல்லாமல் போகப்போகிறாய் என்றாள் -
அவளை விட்டு நகரவில்லை.
என் உலகமே நீதான் என்றேன்..
உன்னை உதைக்கப் போகிறேன் என்றாள் -
அவளை உதறவில்லை
அழகாய் இருக்கிறாய் என்றேன்..
அடி வாங்கப் போகிறாய் என்றாள் -
அவளை அலட்சியப் படுத்தவில்லை
என் அகிலமும் நீ தான் என்றேன்
சற்றும் யோசிக்காமல்
அண்ணா ...என்றாள்
.
(
.
பேசாமல் திரும்பி வந்துவிட்டேன்....
இதுக்கும் மேல அங்க நின்னா நமக்கு என்ன மரியாதை .
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)