கனடாவுக்கு குடிபெயர்ந்துள்ள தமிழர்கள் நம் நாட்டுக்கு வழங்கியுள்ள பங்களிப்பு மகத்தானது. அவர்கள் மீதான விமர்சனங்களை ஒதுக்கித் தள்ளிவிட்டு அவர்களை அரவணைக்க கனடா முன்வர வேண்டும் என்று கனேடியப் பாராளுமன்ற உறுப்பினரான டெரிக் லீ என்பவர் அந்நாட்டுப் பாராளுமன்றத்தில் நேற்று வலியுறுத்தியிருக்கின்றார்.
1940ம் ஆண்டில் முதலாவது தமிழர் கனடாவுக்கு வருகை தந்ததாகக் குறிப்பிடும் அவர், அன்று தொடக்கம இன்று வரை சுமார் சுமார் இரண்டரை இலட்சத்துக்கும் அதிகமான தமிழர்கள் கனடாவுக்கு வருகை தந்திருப்பதாகவும், அவர்கள் மூலமாக கனடாவின் உட்கட்டமைப்பு உள்ளிட்ட பல துறைகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாகவும், கனடாவின் பல் கலாசார சூழலுக்கு தமிழர்கள் வழங்கியுள்ள பங்களிப்பை இலகுவில் மறைத்து விட முடியாது என்றும் அவர் தொடர்ந்தும் வலியுறுத்தியுள்ளார்.
மூன்று தசாப்தங்களுக்கு மேலான உள்நாட்டு யுத்த வன்முறைகள் காரணமாக நொந்து போயிருக்கும் அந்த மக்களை இனியும் ஊடகங்கள் மற்றும் தேவையற்ற விமர்சனங்கள் மூலமாக நோகடிக்காது, அவர்களை நாம் திறந்த மனதுடன் ஏற்றுக் கொள்ள முன் வர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
வெள்ளி, 29 அக்டோபர், 2010
செவ்வாய், 19 அக்டோபர், 2010
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)