ஞாயிறு, 13 பிப்ரவரி, 2011

என்னவளே...


எனக்காக பிறந்தவளே
என் உயிர் சுமப்பவளே

மாலையிட்ட நாளாய் என் கரம் பற்றியவளே
உன்னை பிரிந்தது இல்லை இன்று வரை

உன்னை முதல் முறை பார்த்தபோதே
நீ எனக்காக பிறந்தவள் என மனதில் ஒட்டிக்கொண்டாய்

முதல் பார்வை தொடங்கி இன்று வரை
உன் பார்வையில் காதல் உள்ளதடி

பிரியமானவளே உன் காதல் பார்வை
காணாமல் வாழ்க்கை வெறுமையாக உள்ளதடி!

தனிமையிலே இனிமை கண்டவன் நான்
உன் வருகைக்கு பின்பு தனிமையே பிடிக்கவில்லையடி

வேலைக்கு நான் சென்றாலும்
என் மனம் உன் பின்னால் சுற்றி வரும் வீட்டில்..

இத்தனை வருடங்கள் உன்னை காணாமல்
எப்படி தான் இருந்தேனோ!

என் வாழ்வில் வசந்தமாக வந்தவளே
என் உயிருக்குள் ஊடுருவி என் உயிர் சுமப்பவளே,
நீ இல்லாத ஒவ்வொரு நொடியும் கசக்குதடி எனக்கு..

எங்கு திரும்பினாலும் உன் புன்னகை தான் தெரிகிறது,
என் தலையணை உன் வாசம் வீசுகிறது,

சீக்கிரம் வந்துவிடம்மா பிரசவம் முடிந்து
உன்னை காணாது நான் நானாகவே இல்லை
என் உயிர் தாரமே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக