புதன், 16 பிப்ரவரி, 2011

எமது கிராம வளர்ச்சிக்கு பல்வேறு நாடுகளிலுமுள்ள துடிப்புள்ள இளைஞர்களை ஒன்றிணைத்து வினைத்திறன் மிக்க இளைஞர் கட்டமைப்பு ஒன்றை உருவாக்குவது தொடர்பான அறிவி

முடிவடைந்த போரின் பின்னர் எங்களுடைய கிராமம் நேரடியாகப் பாதிக்கப்படாவிட்டாலும் அங்கு பல்வேறு குறைபாடுகள் காணப்படுகின்றன... நாடு அபிவிருத்தியடைந்து வரும் இந்த நேரத்தில் எமது கிராமத்தை முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்லவும் அங்குள்ள வறிய மக்களை வளப்படுத்தவும் செயல்திறன் மிக்க ஒரு இளைஞர் கட்டமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டிய தேவை ஒன்று இன்று எழுந்துள்ளது....


இன்று எம் கிராமத்தில் உதாரணமாக குப்பிளான் விக்கினேஸ்வரா மகாவித்தியலயத்தில் கல்வி பயிலும் மாணவர்களில் ஏராளமானோர் காலைச் சாப்பாடு கூட சாப்பிடாமல் தான் பாடசாலை வருகிறார்கள்... வன்னியிலிருந்து அகதிமுகாமூடாக விடுதலையாகி வந்த எம் கிராமத்தைச் சேர்ந்த பல உறவுகளும் அன்றாட செலவுக்கே அல்லாடுகிறார்கள்.... இப்படியாக பல்வேறு நடைமுறைப் பிரச்சினைகளின் மத்தியில் எமது இன்று கிராமம் உள்ளது...


குப்பிளானில் உள்ள எம் கிராமத்தின் மீது அக்கறை கொண்ட வினைத்திறன் மிக்க துடிப்புடன் செயலாற்றக் கூடிய இளைஞர்கள் பலர் புலத்தில் பல்வேறு நாடுகளிலும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக